தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2015ம் ஆண்டில் முன்னணியில் இருக்கும் நடிகையாக ஹன்சிகா இருக்கிறார். இந்த ஆண்டில் இவர் நடித்து ஏற்கெனவே 'ஆம்பள, ரோமியோ ஜுலியட், வாலு' ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் 'ரோமியோ ஜுலியட்' மட்டும் வெற்றிகரமாக ஓடியது. 'வாலு' படத்திற்குப் பிறகு ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள 'புலி' படம் நாளை வெளிவர உள்ளது. 'வேலாயுதம்' படத்திற்குப் பிறகு விஜய்யுடன் ஹன்சிகா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள 'புலி' படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றி தன்னை இன்னும் முன்னணிக்குக் கொண்டு சேர்க்கும் என நம்புகிறார்.
'புலி' படத்திற்கப் பிறகு ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள 'அரண்மனை 2' படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து 'உயிரே உயிரே, உதயநிதியுடன் நடிக்கும் பெயரிடப்படாத படம், ஜீவாவுடன் நடிக்கம் 'போக்கிரி ராஜா' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது தெலுங்குப் படங்களில் நடிக்க முடியாத அளவிற்கு தமிழிலேயே தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த ஆண்டிலாவது ஒரு தெலுங்குப் படத்தில் நடித்தார். இந்த ஆண்டில் அது கூட நடிக்கவில்லை.
மற்ற வட இந்திய நடிகைகளைக் காட்டிலும் ஹன்சிகா தமிழில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.