தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
செப்டம்பர் 17 அன்று வெளியாகவிருந்த சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படம் கடைசி நேரத்தில் கடும் சிக்கலை சந்தித்தது. நிதி பிரச்னையால் படம் வெளியாவது தாமதமானது. சுமார் 300 தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி முருகன் படம் வெளியாகாமல்போனால் தான் தயாரித்த மாப்ள சிங்கம் படத்தை அதே தினத்தில் வெளியிடுவது என முடிவு செய்திருந்தார் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன்.
இன்னொரு பக்கம், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கி வைத்திருந்த ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவும், ரஜினி முருகன் படம் வெளியாகாமல்போனால் அந்த தேதியில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை ரிலீஸ் செய்வது என முடிவெடுத்து மளமளவென வேலைகளில் இறங்கினார். அதன்படி செப்டம்பர் 17 அன்று த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை வெளியிட்டும்விட்டார். ஆனால் மாப்ள சிங்கம் படம் வெளிவரவில்லை.
என்ன காரணம்?
மாப்ள சிங்கம் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் இன்னும் விற்கவில்லையாம். படத்தின் பிசினஸில் கணிசமான தொகை சாட்டிலைட் ரைட்ஸ் மூலம்தான் கிடைக்கிறது. எனவே சாட்டிலைட் பிசினஸ் முடிந்த பிறகு மாப்ள சிங்கம் படத்தை ரிலீஸ் பண்ணலாம் என்று காத்திருக்கிறார்கள்