என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
வருகிற விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் விடுமுறையை கருத்தில் கொண்டு செப்டம்பர்-17 அன்று புலி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
அப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடியாமல் இழுத்துக் கொண்டேபோனதால் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
புலி தள்ளி வைக்கப்பட்டதும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படம் செப்டம்பர் 17 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.
ரிலீஸ் தேதிக்கு இன்னும் சில தினங்களே இருந்தநிலையில், அப்படத்தின் தயாரிப்பாளருக்கு கடன் கொடுத்தவர்கள் ரஜினி முருகன் படத்துக்கு செக் வைத்துவிட்டனர்.
கடனை திருப்பி செலுத்தினால்தான் ரஜினி முருகன் படத்துக்கு க்ளியரன்ஸ் தருவோம் என்று சொன்னதால் செப்டம்பர் 17 அன்று ரஜினி முருகன் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு மங்கிவிட்டது. எனவே அதே தேதியில் மாப்ள சிங்கம், த்ரிஷா இல்லைனா நயன்தாரா படங்களை ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்தன.
இன்று இரவு ஏழு மணிவரை காத்திருப்பது அதற்குள் ரஜினி முருகன் நிலவரம் தெரியவில்லை என்றால் துணிந்து செப்டம்பர் 17 அன்று மாப்ள சிங்கம், த்ரிஷா இல்லைனா நயன்தாரா படங்களை ரிலீஸ் செய்யும் அறிவிப்பை வெளியிடுவது என்று எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும், ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவும் முடிவெடுத்தனர்.
இந்நிலையில், 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியிட இருப்பதாக சற்று முன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
அப்ப ரஜினி முருகன்? பஞ்சாயத்து சுமுகமாக முடியவில்லை என்பதால் வேறு வழி இல்லாமல் 'ரஜினி முருகன்' படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள்.
எனவேதான் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.