Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் பாடல் குறித்து இயக்குநர் பெருமிதம்

05 செப், 2015 - 17:20 IST
எழுத்தின் அளவு:
Unakkena-venum-sollu-director-Srinath-interview

உனக்கென்ன வேணும் சொல்லு டீசரும் சரி, முன்னோட்டமும் சரி வெளி வந்த நாள் முதல் எல்லோரையும் கவர்ந்து வருகிறது.பேய் யுகத்தில் வெளி வரும் பேய் படம் என்பதை தவிர , sentiments கூட நிறைந்து உள்ள இந்தப் படத்தில் காதலும் உண்டு என்பதை உணர்த்த இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம், இப்பொழுது இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலின் ஆதி மூலத்தை விவரிக்கிறார்.


கார்த்திக்கும், ஜூடியும் தற்செயலாக வரும் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் அறிமுகமாகிறார்கள். ஒரு பெண்ணின் சகவாசத்திற்காக ஏங்கும் கார்த்திக் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜுடியை சந்திக்க வருகிறான். வந்த இடத்தில் 28 வயது ஆகும் ஜூடியின் வெளிப்படையான பேச்சும்,அழகும், அவளது 8 வயது மகள் டெய்சியின் மேல் அவள் கொண்டு உள்ள பாசமும் கண்டு மயங்குகிறான். அந்தத் தருணத்தில் ,ஜுடியிடம் அவன் மனம் கொண்ட காதலை விவரிக்கும் இடம் தான் இந்தப் பாடல்.


எனக்குள் உணரும் ஒன்று


வருவாய் கண்ணின் முன்னே


தேடும் பொருள்கள் யாவும்


தெளிவாய் தெரியும் பெண்ணே


புதிதாய் வந்த உறவு


கதையாய் மலரும் கண்ணே


வலையை விரிக்கும் காதல்


வசமாய் மாட்டும் இங்கே


தென்றல் கூட்டி வந்தாளே?


என்னை வென்ற சென்றாயோ - நீ?


என்னை அணைக்கும் பேரழகே


மண்நிற மேனி பொன் கொண்ட சிலையே


நீ என் பேனா?. காதல்


உன் நினைவில் தான் துடிக்குதென்பேனா?


வா அன்பே வா - வாழும்


காலங்கள் இதுவரை வசந்தங்கள் தானா?


நம் காதல் உணர


உன்னை கண்ட பொழுதில்


உலகம் உறைய கண்டேன்


வெண்ணிற பனியின் துளியே தானோ நீ


பெண்மை தந்த மாற்றம்


என்னுள்ளே எரிய கண்டேன்


இடையர நிரம்பும் காதல்


என்னுள் இறங்க கண்டேன் நானே


உன்னாலே கண்டேனே பேரின்பம் நூறு கோடி


தன்னாலே வந்தேனே மெய்மாயம் தன்னை தேடி


மொட்டு மலர்ந்திட வந்தாலே


சிட்டு போல் அவள் சிரித்தாலே


எட்டு போல் அவள் இடையாலே


சுட்டு போட்டு அவள் சென்றாலே


காட்டு பூக்களும் நீதானே


பாட்டு புலவனும் நான்தானே


வீணை தந்திகள் நீதானே


மீட்டும் விரல்களும் நான்தானே


தொட்டு தழுவிட வந்தேனே


பட்டு விலகிட நின்றேனே


கட்டு குலைந்திட கண்டேனே


நெஞ்சம் முழுதும் நீ தானோ?


கொஞ்சி பேசிடு கண்ணாலே


கெஞ்சி கேக்குது தன்னாலே


காதல் மாயை தந்தாயடி....


தொட்டு தழுவிட வந்தேனே


பட்டு விலகிட நின்றேனே


கட்டு குலைத்திட கண்டேனே


நெஞ்சம் முழுதும் நீ தானோ?


கொஞ்சிடு பேசிடு கண்ணாலே


கெஞ்சி கேக்குது தன்னாலே


காதல் மாலை தந்தாயடி...


மணமாகாத ஒரு ஆணுக்கும் , மனமும் மணமும் உடைந்த ஒரு பெண்ணுக்குள் ஏற்படும் நிகழ்வுகளே இந்தப் பாடல்.. இந்தப் பாடலை தொடர்ந்து அவர்களிடம் ஏற்படும் விபரீதமான மாற்றங்கள் தான் உனக்கென்ன வேணும் சொல்லு என்று விவரிக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in