ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
இளையதலைமுறை கதாநாயக நடிகர்களில் தயாரிப்பாளர்களின் நடிகர் என்ற பெயரை பெற்றிருப்பவர் விமல். படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை பணம் கொட்டும் ஏடிஎம் இயந்திரங்களாகவே ஹீரோக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் தங்களின் மார்க்கெட் மதிப்புக்கு சம்மந்தமே இல்லாமல் அவர்களது படங்கள் எவ்வளவு பிசினஸ் ஆகின்றன என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்காமல் எக்கச்சக்கமாக சம்பளம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகின்றனர்.
இப்படிப்பட்ட ஹீரோக்களுக்கு மத்தியில், நடிகர் தயாரிப்பாளர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி இருக்கிறார் விமல். தன்னை வைத்து படம் எடுப்பவர்கள் கஷ்டப்படக்கூடாது என்று நினைப்பவர் விமல். அதனால் பேசிய சம்பளத்தில் முழு சம்பளத்தையும் அவர் இதுவரை வாங்கியதே இல்லையாம். பட ரிலீஸ் நேரத்தில் தயாரிப்பாளர் கஷ்டப்படுகிறார் என்று சொன்னால் சம்பள பாக்கியை வேண்டாம் என்று சொல்லிவிடுவாராம். இப்படி எத்தனையோ படங்களுக்கு தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார் விமல்.
ஜன்னலோரம் பட வெளியீட்டின்போது பிரச்சனை ஏற்பட்டபோது தன் சம்பளத்தில் 50 லட்சத்தை விட்டுக் கொடுத்தார் விமல். அந்தப்படம், சென்னை நகரத்தில் வெளியாகாமல் போய்விடும் சூழல் ஏற்பட்டபோது மேற்கொண்டு 50 லட்சத்தைக் கொடுத்து ஜன்னலோரம் படம் ரிலீஸ் ஆக காரணமாக இருந்திருக்கிறார்.
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் மாப்ள சிங்கம் படத்தில் நடித்துள்ளார் விமல். அந்தப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. மாப்ள சிங்கம் ரிலீஸாவதற்கு முன்பே விமலுக்கு அடுத்தப்படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளார் மதன். காரணம்... மாப்ள சிங்கம் படத்தின் மீதுள்ள நம்பிக்கை மட்டுமல்ல விமல் மீதுள்ள நன்மதிப்பும்தான். இந்தப் படத்தை பூபதிபாண்டியன் இயக்குகிறார்.