அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
சூர்யா மூவீஸ் நிறுவன தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆரம்பம் ,என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து இப்போது அஜீத்தின் தலை-56 என்று சொல்லப்படும் புதிய படத்தையும் தயாரித்து வருகிறார். அவரிடமே ஒரு குழந்தை கதை ஒன்றைச் சொன்னதாம் அதுவும் பேய்க்கதை. இது பற்றி உனக்கென்ன வேணும் சொல்லு படவிழாவில் கூறினார்.
"இன்று பேய்ப்பட உலகம். இது பேய் யுகமாக இருக்கிறது. என்னிடம் ஒரு குழந்தை வந்து ஒரு பேய்க் கதை எழுதியிருக்கிறேன் என்று ஒரு பேப்பரைக் கொடுத்தது. பேய் இருக்கா இல்லையா என்று கேட்டேன். சிரித்துக் கொண்டது பதில் சொல்லவில்லை. கொடுத்த கதையைப் படித்துப் பார்த்தேன். ஒரே பக்கத்தில் அர்த்த முள்ள கதையாகவே இருந்தது அதுவும் ஒரு சஸ்பென்சுடன்இருந்தது. அசந்து விட்டேன். குழந்தைகளையும் பேய்ப்படக் கதை எழுதும் அளவுக்கு பேய்ப்படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. உனக்கென்ன வேணும் சொல்லு படமும் ஒரு பேய்ப்படம் தான்,இதுவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என்றார்.
பேய்க்கதை சொல்லி குழந்தைகளை பயமுறுத்திய காலம் போய், குழந்தைகளே பேய்க்கதை எழுதுகிற காலத்தில் இருக்கிறோம். எந்த அளவுக்கு காலம் கெட்டுப் போய்விட்டது பார்த்தீர்களா?