'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஓணம் பண்டிகைக்கு முன்பு, கேரளாவில் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் ஓட்டிய ஜீப் மோதி, கல்லூரி மாணவி ஒருவர் விபத்துக்குள்ளான விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடைபெற்றது பற்றி சொல்லியிருந்தோம் அல்லவா..? அந்த மாணவர்கள் சமீபத்திய ஹிட்டான 'பிரேமம்' பட பாணியில் உடையணிந்து, குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாகவும, அதனால் விபத்து ஏற்பட்டதாகவும், திரைப்படங்கள் மாணவர்களுக்கு தவறாக வழிகாட்டக்கூடாது என்றும் டி.ஜி.பி.சென்குமார் கருத்து தெரிவித்திருந்தார்..
ஆனால் சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த சாய் பல்லவி, சினிமாவில் காட்டுவதை அப்படியே இமிடேட் பண்ண ரசிகர்கள் ஒன்றும் குரங்குகள் அல்ல என்றும், பிரமேம ட்ரெண்டை பாலோ பண்ணுவதில் தப்பெதுவும் இருப்பதாக தோன்றவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்... ஆனால் இதை கவனித்த மீடியா ஆட்கள் சிலர், சாய் பல்லவி டி.ஜி.பிக்கு எதிராக இந்த கருத்தை சொன்னதாக எழுதிவிட்டர்களாம்.
அவ்வளவுதான், விஷயம் வேறுவிதமாக திசைமாறிப்போவதை உணர்ந்த சாய் பல்லவி, “நான் அந்த அர்த்தத்தில் சொலவில்லை.. ஒரு படம் இதுபோன்ற விஷயங்களுக்காக கண்டனங்களுக்கு ஆளாக்கப்படக்கூடாது என்று தான் சொன்னேன்.. நான் சொன்ன வார்த்தைகள் தவறாக திரித்து கூறப்பட்டுள்ளன” என்று பதறியடித்து விளக்கம் கொடுத்துள்ளார். நடித்து ஒரு படம் வெளியான நிலையிலேயே சாய் பல்லவி இப்படி கூறியுள்ளது மீடியாவையும், திரையுலகையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.