தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதிய திரைப்படங்களை நாளை முதல் வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து பாயும் புலி திரைப்படம் நாளை வெளிவருமா வராதா என சந்தேகம் ஏற்பட்டது. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பைத் தொடர்ந்து விஷால் கடைசி நிமிடத்தில் படத்தை வெளியிடாமல் முடக்குவது முறையற்றது என்று கருத்துத் தெரிவித்திருந்தார். “ஒரு மாத காலமாக இந்தப் பிரச்சனை குறித்து எந்த முடிவையும் எடுக்காமல், கடைசி நாளில் இப்படி பிரச்சனையை உருவாக்குவது சரியல்ல. ஒரு வினியோகஸ்தருக்காகவும், சில திரையரங்குகளுக்காகவும் படத்தின் வெளியீட்டை ஏன் நிறுத்த வேண்டும்,” என்று அவர் நேற்று இரவே கருத்து தெரிவித்திருந்தார்.
அதன் பின் நள்ளிரவில் மேலும் ஒரு டிவீட்டைப் பதிவு செய்திருக்கிறார் விஷால். அதில், “பாயும் புலி படம் திட்டமிட்டபடி இரு மொழிகளிலும் செப்டம்பர் 4ம் தேதி வெளிவரும். கடின உழைப்பு என்றுமே வீண் போகாது,” என்று அவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஷாலிடம் பாயும் புலி படம் பிரச்னை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது மிகவும் கோபத்துடன் பேசிய விஷால்...
என் உயிரை கொடுத்தாவது செப்., 4ம் தேதி பாயும் புலி படத்தை ரிலீஸ் செய்வேன். என்னால் எனது தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ, தியேட்டர்கள் அதிபர்களோ யாரும் பாதிக்கப்பட கூடாது. படம் ரிலீஸாகும் முதல்நாள் முன்பு இதுபோன்ற பிரச்னைகளை கிளப்புகிறார்கள். கண்டிப்பாக செப்., 4ல் பாயும் புலி ரிலீஸாகும் என்று கூறியுள்ளார்.