இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஒருகாலத்தில் சினிமாவில் நடிக்க பாட்டு பாடத் தெரியவேண்டும். இப்போது அதெல்லாம் கிடையாது.தமிழ் பேசக் கூட தெரிய வேண்டாம். தமிழ் என்ற ஒன்று கூட தெரிய வேண்டாம்.தமிழ் பேசித்தான் நடிக்க வேண்டும் என்றால்இன்று யாராலும் நடிக்க முடியாது. குறிப்பாக நடிகைகள் யாராலும் நடிக்க முடியாது.எல்லாருக்கும் பெரும்பாலும் இரவல் குரல்தான்.
குரலும் கொடுப்பதில்லை.தமிழ் வசனங்களையாவது ஒரு டம்மி வசனம் போல பேசி நடிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. தமிழே பேசாமலேயே பல கோடி சம்பாதித்துக் கொண்டு மும்பை சென்று விடுகிறார்கள். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்த போது தமிழே தெரியாது வசனத்தை தமிழில் இருப்பதை ஹிந்தியில் ,ஆங்கிலத்தில் எழுதியாவது பேசினாரா என்றால் அதுவும் இல்லை. ப்ராம்ட்டிங் என்கிற முறையில் முதலில் உதவி இயக்குநர் கத்திப் பேசுவதை திரும்ப உள்வாங்கி உடனே பேசி நடித்தாரா என்றால்அதுவும் இல்லை. தமிழ் வசனத்துக்கு ஏற்ப ஏதாவது ஆங்கிலத்தில் பேசி. அதாவது உதாரணத்துக்கு வேலை இல்லையா உனக்கு என்பதற்குப் பதிலாக வேர் ஆர்யூ கோயிங் நவ் என்று ஏறக்குறைய உதட்டசைவு வரும்படி ஆங்கிலத்தில் பேசி நடித்தாராம். என்ன கொடுமை என்கிறீர்களா? இது இன்றும் தொடர்கிறது.
பாயும்புலி படத்தில் காஜல் அகர்வால் நடித்த போது தனக்கு ப்ராம்ப்டிங் வேண்டும் என்றாராம். இயக்குநர் சுசீந்திரன் மறுத்து விட்டாராம். என் உதவி இயக்குநர் ப்ராம்ப்டிங் செய்ய மாட்டார். எந்த மொழியிலாவது எழுதிவிட்டு சொல்லலாம். வசனத்தை நீங்கள்தான் பேசவேண்டும். என்று கறாராகக் கூறி அப்படியே பேச வைத்தாராம். தமிழே பேசாத காஜல் அகர்வால் போன்ற பலர் இன்று தமிழில் முன்னணி நடிகைகள்.