'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்திற்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். தனது மனைவி நர்மதா,மகன் கௌதம் கிருஷ்ணா,மகள் சித்தாராவுடன் விடுமுறையைக் கழித்து வரும் மகேஷ் பாபு தனது மகன் கௌதமின் பிறந்தநாளை தாய்லாந்தில் உள்ள கோய் சமுயி தீவில் கொண்டாட திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரும் தனது மகன் கௌதம் கிருஷ்ணாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவும் மகேஷ் பாபு முடிவு செய்துள்ளாராம். ஓய்விலிருந்து திரும்பியதும் மகேஷ் பாபு பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படத்தை பிவிபி நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் பாபு தயாரிக்கின்றார். நடிகைகள் சமந்தா, பிரனிதா, காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.