ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் நடிக்க வந்து 13 வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. இந்த 2015ம் ஆண்டு அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்து வருகிறது. இதுவரை முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக மட்டுமே நடித்து வந்து த்ரிஷா முதன் முறையாக நாயகிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். படத்தின் பெயரையே 'நாயகி' என வைத்துள்ள அந்தப் படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
பொதுவாக த்ரிஷா என்றாலே மாடர்ன் உடையில் வலம் வரும் நவநாகரீக மங்கையாக மட்டுமே இருப்பார். திரைப்படங்களிலும் அதிகமாக மாடர்ன் உடையில்தான் நடித்திருப்பார். 'உனக்கும் எனக்கும்' படத்தில் மட்டுமே பாவாடை, தாவணியில் அதிகமாக நடித்திருப்பார். 'நாயகி' படத்திற்காக இதுவரை வெளியிடப்பட்டுள்ள டிசைன்களில் விதவிதமான புடவையில் த்ரிஷா காட்சியளிப்பது வித்தியாசமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக உடல் எடை கூடாமல் ஸ்லிம்மாக த்ரிஷா காட்சியளிப்பதே அந்த அழகுக்குக் காரணம் என அவருடைய ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
'நாயகி' படத்தின் டிசைன்களைப் பார்த்து ரசிகர்கள் ஒரு பக்கம் பாராட்டி வந்தாலும், ஆர்யா, பிரியாமணி, சார்மி, ரவி. கே.சந்திரன் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளார்கள். அவர்களில் த்ரிஷாவின் நெருங்கிய நண்பரான ராணா டகுபதியும் ஒருவர். முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டும் த்ரிஷா, டிவிட்டரில் நேரடியாக நன்றி தெரிவித்துள்ளார்.