ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருடன் போலீஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு கெனன்யா பிலிம்ஸ் நிறுவனமும், இயக்குனர் கார்த்திக் ராஜுவும் இணைந்து வழங்கும் படம் உள்குத்து. அட்டகத்தி படத்திற்கு பிறகு தினேஷூம், நந்திதாவும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நாகர்கோவிலில் துவங்கியது. மீனவர்களின் வாழ்வியலை பற்றி விவரிக்கும் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. இந்தக் கதைக்கு நாகர்கோவில் தான் சிறந்த கதைக் களமாகும். என படத்தின் பெரும்பாலான காட்சிகளை நாகர்கோவிலேயே நடத்த உள்ளனர்.
ஒருபக்கம் அரேபிய கடல் மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலை தொடர் என்று நாகர்கோவில் ஒரு அழகிய நகரமாகும். அந்த நகரத்தின் கலாச்சாரமும், அந்த நகரத்து மக்களின் வாழ்வியலும் மிகவும் சுவராசியமானது. நான் பார்த்த என் கண்கள் கவர்ந்த அந்த நகரத்தின் அழகை ரசிகர்களோடு பகிர்ந்துக் கொள்ள ஆசை படுகிறேன் என்று கூறுகிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு.