'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுப்பிரமணியபுரம், நாடோடி, ரம்மி படங்களில் நடித்தவர் இனிகோ பிரபாகரன். ஹீரோவாக ஜெயிக்க போராடும் இளம் நடிகர்களில் ஒருவர். இவர் மிகவும் எதிர்பார்த்த ரம்மி படம்கூட இவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது அவர் வீரைய்யன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் இயக்குனர் எஸ்.பரித் இயக்குகிறார். தென்னவன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்செண்ட், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பி.வி.முருகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கோலிசோடா அருணகிரி இசை அமைக்கிறார்.
"மன்னர்கள் வாழ்ந்த பூமியான தஞ்சையில் இப்போது மக்கள எப்படி வாழ்கிறார்கள் என்பதுதான் கதை. விவசாயத்தை உயிர் மூச்சாக கொண்ட மக்கள் இப்போது வெளிநாடுகளில் கூலி வேலை செய்யும் நிலை ஏன் வந்தது. தஞ்சையின் பழம்பெருமை என்ன ஆனது என்பதை பற்றிச் சொல்லப்போகும் படம். முழு படமும் தஞ்சையை சுற்றி படமாகிறது" என்கிறார் இயக்குனர் பரித். படத்தின் பூஜை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவிலில் நடந்தது.