தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டில் பிரமாண்டமாக திரைக்கு வந்து வசூலிலும் பிரமாண்ட சாதனை நிகழ்த்தியிருக்கும் பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலி தற்போது அப்படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்க மறுத்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ரூ.20 கோடி சம்பளமாக தருவதாகக் கூறிய போதும் இயக்குநர் ராஜமௌலி சிரஞ்சீவி பட வாய்ப்பை மறுத்து விட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் தான் நடிகரும் சிரஞ்சீவியின் 150வது படத்தின் தயாரிப்பாளருமான ராம் சரண் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தை சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பூரி ஜெகன்நாத் சிரஞ்சீவிக்காக ஆட்டோ ஜானி என்ற பட தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது. இதன் காரணமாகவே ராஜமௌலி சிரஞ்சீவி படத்தை இயக்க மறுத்ததாகக் கூறப்படுகின்றது.