குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
மலையாள நட்சத்திரங்கள், அது நடிகரோ அல்லது நடிகையோ சினிமாவில் நடிப்பதையும் தாண்டி சமூகத்திற்கு உதவும் விதத்தில் தங்களது பங்களிப்பு இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். மோகன்லால், மம்முட்டி உட்பட சில முன்னணி நடிகர்களும், காவ்யா மாதவன், மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில நடிகைகளும் ஏதாவது ஒரு சமூக அமைப்பில் உறுப்பினர்களாகத்தான் இருக்கின்றனர். முக்கியமான நேரங்களில் அந்த அமைப்பின் கூட்டங்களில் கலந்துகொண்டு, அவற்றின் திட்டங்களை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கின்றனர்.
இப்போது பொதுமக்களின் உயிர்காக்கும் முக்கிய சேவையான ஆம்புலன்ஸ் (102) சேவையை கொச்சின் மாவட்ட எல்லை வரை ஒருமுகப்படுத்துவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை ஏஞ்சல்ஸ் (Active Network Group of Emergency Life Savers) என்கிற அமைப்பு தான் அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டப்படி நகரிலோ, கிராமத்திலோ எங்கு வசித்தாலும் போன் செய்தால், மூன்று நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் அவர்களது இருப்பிடத்துக்கு வந்துவிடுமாம்.
இந்த திட்டத்தின் தொலைபேசி சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக அதன் நல்லெண்ண தூதராக பொறுப்பேற்க இருக்கிறார் நடிகர் ஜெயசூர்யா. இதில் தூதராவது குறித்து பேஸ்புக்கில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயசூர்யா. இந்த திட்டம் வரும் ஞாயிறு அன்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமயில் துவக்கி வைக்கப்பட இருக்கிறது.