துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
கவிதாலயா தயாரிப்பில் கிருஷ்ண லீலை படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது பரபரப்பாக பேசப்படும் நடிகராக இருந்தார் திருட்டுப்பயலே ஜீவன். ஆனால் அந்த படம் சில பல காரணங்களால் இப்போதுவரை திரைக்கு வரவில்லை. அதனால் அதன்பிறகு ஜீவனை யாரும் புதிய படங்களுக்கு புக் பண்ணாததால் பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
இந்த நிலையில், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தான் தனது ஜெயிக்கிற குதிரை படத்துக்காக அவரை மீண்டும் அழைத்து வந்தார். ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே அப்படத்துக்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதையடுத்து அதிபர் என்ற படத்தில் இயக்குனர் சமுத்திரகனியுடன் இணைந்து நடித்து வந்தார் ஜீவன். அந்த படம் தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில், பைனான்ஸ் பிரச்னையில் நிறுத்தப்பட்ட ஜெயிக்கிற குதிரை படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. அதனால் ரீ-என்ட்ரியில் நடித்த முதல் படமே கிடப்பில் கிடக்கிறதே என்று மனதளவில் பீல் பண்ணிக்கொண்டிருந்த ஜீவன் மறுபடியும் உற்சாகமாக ஜெயிக்கிற குதிரையில் ஏறியிருக்கிறார்.