ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவையொட்டி இயக்குநர் சங்கம் சார்பில் பெரிய மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமன், இசை சகாப்தம் நம்மை விட்டு பிரிந்து விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப உறுப்பினர் போன்று இருந்தவர் எம்.எஸ்.வி., என்ன ரேசன் கார்டில் அவர் பெயர் தான் இல்லை. காற்று இல்லாத வீடு கூட இருக்கலாம் ஆனால் எம்.எஸ்.வி.யின் பாட்டு இல்லாத வீடே கிடையாது. நீதிக்கு தலை வணங்குபவர். அண்ணன், தம்பி, அப்பா, அம்மா உள்ளிட்ட குடும்ப உறவுகளில் இருந்து காதல், சோகம் உள்ளிட்ட எல்லாவிதமான பாடல்களையும் தந்தவர் எம்.எஸ்.வி. உத்தமனிதனாக இருந்தவர் இன்று நம்மை விட்டு பிரிந்தது என்பது ஆராத துயரத்தை தந்துள்ளது என்றார்.