மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அஜீத் சிறந்த புகைப்பட கலைஞர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் தனது வீட்டிலேயே நவீன வசதிகள் கொண்ட போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கிறார். விதவிதமான கேமராக்கள் வைத்திருக்கிறான். மார்கெட்டிற்கு வரும் நவீன கேமராக்கள் அடுத்த நாளே அஜீத் வீட்டில் இருக்கும். தனது குழந்தைகளை மாதம் ஒரு போட்டோ எடுத்து பாதுகாக்கிறார். வருடம் ஒரு முறை எடுக்கும் போட்டோக்களை பிரேம் பண்ணி வருடம் குறித்து அதை மாட்டி வைக்கிறார். குழந்தைகளின் வளர்ச்சி, தோற்ற மாற்றம் குறித்த ஆய்வுக்கு இது பயன்படுமாம்.
அடுத்து எங்கு படப்பிடிப்பிற்கு சென்றாலும் மறக்காமல் தன்னிடம் உள்ள கேமராவை எடுத்துச் செல்வார். தனது மனம் கவர்ந்தவர்களை அவர்கள் அறியாமல் படம் எடுத்து அதை பிரேம் செய்து கொடுத்து சர்ப்ரைஸ் உண்டாக்குவார். தற்போது அஜீத்தின் 56வது படத்தை இயக்கும் வீரம் சிவா படப்பிடிப்பு தளத்தில் உட்கார்ந்தபடியே குட்டி தூக்கம் போடுவார் அதையும் படம் எடுத்து அவரிடமே கொடுத்து அசத்தினார். கடந்த வாரம் நடிகர் அப்புகுட்டியை விதவிதமாக படம் எடுத்து கொடுத்து ஒரே மாதிரி நடிக்காதீர்கள் விதவிதமா நடியுங்கள் பெயரையும் அப்புக்குட்டி என்பதை மாற்றி சொந்த பெயரான சிவபாலன் என்ற பெயரிலேயே நடியுங்கள் என்று கூறினார்.
தற்போது 56வது படத்தின் படப்பிடிப்பு மிலன் நகரில் நடந்து வருகிறது. அஜீத்தின் புகைப்பட ஆர்வம் பற்றியும், சமீபத்தில் அவர் அப்புக்குட்டியை படம் எடுத்ததை பற்றியும் அறிந்த ஸ்ருதிஹாசன் தன்னையும் படம் எடுத்து தரும்படி கேட்டிருக்கிறார். ஒரு நாள் படப்பிடிப்பு இடைவெளியில் ஸ்ருதியை விதவிதமாக படம் எடுத்து கொடுத்து அசத்தி விட்டார் அஜீத். இந்த படங்களை பொக்கிஷமாக பாதுகாப்பேன் என்று சந்தோஷத்தில் பொங்குகிறார் ஸ்ருதி ஹாசன்.