'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ஓ காதல் கண்மணி படம் வர்த்தக ரீதியில் வெற்றியடைந்ததால் உற்சாகமாகிவிட்டார் மணிரத்னம். ஓ காதல் கண்மணியின் வெற்றியை மக்கள் மறந்து போவதற்குள் அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்துவிட்டாராம். இதற்கிடையில் மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர். அந்த அடிப்படையில் கார்த்தியை அணுகி இருக்கிறாரா?
அதுதான் இல்லை...மணிரத்னத்தின் அடுத்தப் படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் தான். அந்தப் படத்தில் கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வழக்கம்போல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, மீண்டும் இணைகிறார் பி.சி. ஸ்ரீராம். இந்தப் படத்தை தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இயக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம். ஓ காதல் கண்மணி படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்ட ஸ்டுடியோகிரீன் நிறுவனம், மணிரத்னம் இயக்க உள்ள படத்தை தானே தயாரிப்பதாக அணுகியது.
மணிரத்னம் மறுத்துவிட்டாராம்.