'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிவகார்த்திகேயனின் இன்றைய வெற்றிக்கு பல பேர் காரணமாக இருந்தாலும், அவர்களில் முக்கியமானவர்கள் இசையமைப்பாளர்கள் இமான் மற்றும் அனிரூத். தொலைக்காட்சி தொகுப்பாளராக மட்டுமே இருந்த சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ அந்தஸ்த்து கிடைக்க இளைஞர்கள் மத்தியில் அவருக்கு உள்ள வரவேற்புதான் காரணம். இந்த வரவேற்பு சிவகார்த்திகேயனுக்கு சாத்தியப்பட அவர் நடித்த படங்களின் பாடல் ஹிட்டானதும் ஒரு காரணம். அந்தப்பாடல்கள்தான் சிவகார்த்திகேயனை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
சிவகார்த்திகேயன் ஸோலோ ஹீரோவாக நடித்த மனம் கொத்திப் பறவை படத்துக்கு இசையமைத்தவர் இமான். இப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகின. அடுத்து சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்தப் படத்தில் இமான் இசையமைத்த ஊதாகலரு ரிப்பன் பாடல்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தையே வெற்றியடைய வைத்தது. அடுத்து ரஜினி முருகன் படத்துக்கும் இமான் தான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பாடல் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இப்படியாக சிவகார்த்திகேயனுக்கு எல்லாவகையிலும் உயர்வைத்தேடிக் கொடுத்தவர் இமானை.
அதேப்போல் எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கி சட்டை போன்ற படங்களின் பாடல்களும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியை கொடுத்தது. இதனால் தனது படங்களுக்கு இமான், அனிரூத் என மாறி மாறி பயணித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.