இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
இயக்குனர் செல்வராகவனுடனான திருமண முறிவுக்கு பின், சின்ன சின்ன வேடங்களில் திரைப்படங்களிலும், சில, டிவி சீரியல்களிலும் நடித்து வந்த சோனியா அகர்வால், பாலக்காட்டு மாதவன் படத்தின் மூலம், மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனிமை வாழ்க்கை, அடுத்த திருமணம், பார்ட்டிகளில் பங்கேற்பதால் எழுந்துள்ள சர்ச்சை என, பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
நடிகை சதாவும், நீங்களும் கனவு நாயகியா வலம் வந்தீங்க; இப்போ காமெடி படங்களில் நடிக்க காரணம்?
கனவு நாயகியா, கனவு தேவதையா, நாங்கள் நடித்திருக்கலாம். ஆனா, இப்ப இருக்கும் சினிமா சுத்தமாக மாறி விட்டது. நிறைய படங்களில், நடிகைகள் வேற வேற கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க. த்ரிஷா, என்னை அறிந்தால் படத்தில் அம்மா ரோல் பண்ணாங்க. இப்ப எனக்கு, 33 வயசாகுது. இந்த வயசுக்கு என்ன கேரக்டர் வருதோ, அதைத் தான் செய்ய முடியும்; 16 வயசு நடிகையா, ஸ்கிரீன்ல திரும்ப வர முடியாதே. எனக்கு தெரிந்து இப்ப எல்லாம், கதை, வரும் கேரக்டர் இதுதான் முக்கியம்னு நினைக்கிறேன். நாங்க நடிகர்கள் அவ்வளவு தான்.
நீங்கள் தமிழ் திரையுலகிற்கு வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால், இன்னும் தமிழ் பேச வரலியே ஏன்?
எனக்கு தமிழ் பேசுவது கொஞ்சம் கஷ்டம். அதை விட நான் பேசுவதை கேட்கும் உங்களுக்கு, அதிக கஷ்டமா இருக்கும். தமிழில் மற்றவர்கள் பேசுவதை என்னால், புரிந்து கொள்ள முடியும். ஆனால், சரளமாக தமிழ் பேச வரவில்லை. கற்றுக்கொள்ள ஆசை இருக்கு, பார்க்கலாம்.
வித்யாபாலன் போன்ற சில நடிகைகள், நிறைய, சேலஞ்ச் எடுத்து நடிக்கிறாங்க; உங்களுக்கு அது மாதிரி படங்கள் பண்ண ஆசை இல்லையா?
எனக்கு இயல்பாகவே, ரிஸ்க் எடுக்க பிடிக்கும். வித்யாபாலன், கங்கனா மாதிரி நிச்சயமாக வித்தியாசமா சேலஞ்ச் ரோலில் நடிக்க ஆசைப்படுகிறேன்; நடிப்பேன். எனக்கு அதில் எந்த தயக்கமும் கிடையாது.
செல்வராகவனை பிரிந்த தனிமை வாழ்க்கை உங்களுக்கு பிடிச்சிருக்கா; வருத்தமாக இல்லையா?
நான் தனிமையில் இருப்பதாக, எப்போதும் நினைப்பதே இல்லை. என்னை சுற்றி என் நட்பு வட்டம் இருக்கு. நான் அவரை மிஸ் பண்றேன்; ஆனாலும், வருத்தமாக இல்லை. ஒரு பிரேக்-அப் அவ்வளவு தான். ஆனால், இது முடிவல்ல. என் குடும்பத்தினரோட, நண்பர்களோட என் நேரத்தை, வாழ்க்கையை ரசித்து பார்க்கிறேன். சென்னையில் தான் இருக்கேன்; சந்தோஷமாக படங்களில் நடக்கிறேன்.
செல்வராகவன் படம் இயக்கப் போகிறார்; அந்தப் படத்தில் நீங்கள் நடிப்பீர்களா?
இதுவரை யாரும், நான் நடிக்கும்படி கேட்கவில்லை. செல்வராகவனுக்கு கல்யாணமாகி, இப்போது குழந்தைகள் இருக்காங்க. அவர் படத்தில் நடிக்க எனக்கு ரொம்ப ஆசை தான். ஆனா, அவர் மனைவிக்கு நான் நடிப்பது பிடிக்க வேண்டும்; அவங்களுக்கு பிரச்னை இல்லைன்னு நினைத்தாங்கன்னா, நான் கண்டிப்பாக நடிப்பேன்.
நடிகர் தனுஷ் பற்றி?
நல்ல நடிகர், திறமைசாலி; எனக்கு நல்ல நண்பர். அவர் கூட நடிக்க, மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக மறுப்பு ஏதும் சொல்லாமல் நடிப்பேன். எங்களுக்குள் ஒண்ணும் பிரச்னை இல்லை; ஒரே துறையில் தானே இருக்கிறோம்.
எதில் நீங்க ரொம்ப வீக்?
டான்ஸ்ல நான் ரொம்ப வீக்; சரியா வராது. இன்னும் சில நாட்களில், திரும்பவும் டான்ஸ் கிளாஸ் போய், முறையான பயிற்சி எடுக்கப் போறேன்.
சினிமா தவிர பலரும் பிசினஸ் பண்றாங்க, உங்களுக்கு ஏதும் ஐடியா இருக்கா?
சண்டிகரில் லெதர் பேக்டரி துவக்கப் போகிறேன்; அதற்கான வேலைகள் நடக்கின்றன. ஆகஸ்டில் முழு மூச்சா, பிசினஸ்ல இறங்குவேன் என்று நினைக்கிறேன். நடிப்பு ஒரு பக்கம்; பிசினஸ் இன்னொரு பக்கம்னு கொஞ்சம் பிளான் பண்ணி வைத்திருக்கிறேன்.
திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிச்சீங்களா?
எதுவும் திட்டமிடல. ஆனா, எனக்கு சரியான, ஒரு நபர் கிடைத்து, என்னை பற்றி அவரும், அவரைப் பற்றி நானும் முழுமையாக தெரிந்து கொண்டால், நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். நான்கு ஆண்டு பிரேக்; 3 ஆண்டு பிரேக் இதெல்லாம் எனக்கு இல்லை. எனக்கு பிடிச்சிருந்தா, எப்போ வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வேன்.
உங்களை பற்றி வரும் கிசுகிசுக்கள்?
நான் கவலைப்பட மாட்டேன். உண்மையா இருந்தால் நானே முன் வந்து சொல்வேன். பொய், கற்பனைக்கு எல்லாம் என் நேரத்தை வீணாக்க மாட்டேன்; ரசிகர்களையும் குழப்ப மாட்டேன்.
நிறைய பார்ட்டிகளில் உங்களை பார்க்க முடிகிறதே?
என் வாழ்க்கையை நான், என்ஜாய் பண்றேன்; யாருக்கு இதில் கவலை. என்னால் பார்ட்டிக்கு போக முடிவதால் போகிறேன். யாரையும் தொந்தரவு பண்ணலியே!