மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
எந்த நேரத்தில் நகுல் நடித்த நாரதன் படத்திற்கு நாரதன் எனப்பெயர் சூட்டினார்களோ? பாவம்., நாரதன் நாயகர் நகுல் அதிக சம்பளம் கேட்டு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கே வரவில்லை...என தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நாரதன் படத்தின் தயாரிப்பு தரப்பு புகார் பட்டியல் வாசிக்க., உடனடியாக, தன் தரப்பு நியாயத்தை நடிகர் சங்கத்திற்கு கடிதமாக அனுப்பியுள்ளார் நகுல். கூடவே, அதனோடு தனக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டு அக்ரிமெண்ட்டும் போடப்பட்டிருக்கும் விஷயத்தையும் அதன் காப்பியையும் நடிகர் சங்கத்திற்கு நகுல் அனுப்பிய பின் தான் நகுல் மீதுள்ள நியாயம் நடிகர் சங்க செயலாளர் ராதாரவிக்கே தெரியவந்திருக்கிறது. அதில் உள்ள விவரப்படி., நகுலுக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, பல தவணைகளாக, ரூ. 32 லடசம் தரப்பட்டிருக்கிறது. மீதி ரூ. 18 லட்சம் வந்தால்தான் மத்திய அரசின் புதிய உத்தரவுப்படி, வாங்கிய சம்பளத்திற்கு வரிகட்டும் உத்தேசத்தில் இருந்திருக்கிறார் நகுல். வரியை உரிய நேரத்தில் கட்டி முடிக்காவிட்டால் மாதாமாதம் காலதாமத பெனால்டி கட்ட வேண்டுமாம்.