ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பில்லா, ஆரம்பம் படங்களின் இயக்குநராக விஷ்ணுவர்தனின் தம்பி என்ற விசிட்டிங்கார்டை வைத்துக் கொண்டு நடிகரானவர் கிருஷ்ணா. அலிபாபா, கழுகு, என பல படங்களில் நடித்தும் பிரபலமாகாமலே இருந்த கிருஷ்ணா விஜய்சேதுபதி உடன் இணைந்து வன்மம் என்ற படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் நடித்த பிறகுதான் நாலு பேருக்கு தெரிகிற அளவுக்கு வளர்ந்தார்.
இந்நிலையில், தன் மனைவியை செய்வதாக அறிவித்திருக்கிறார் கிருஷ்ணா. கடந்த வருடம் தான் ஹேமலதா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அதற்குள் விவாகரத்து. என்ன காரணம்?
கிருஷ்ணா ஹேமலாதா விவாகரத்துக்கு நடிகை சுனைனாதான் காரணம் என்று கோலிவுட்டில் பரவலாக செய்தி வெளியாகியுள்ளது. வன்மம் படத்தில் சுனைனா உடன் சேர்ந்து நடித்தார் கிருஷ்ணா. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது சுனைனா மீது காதல் வயப்பட்டிருக்கிறார் கிருஷ்ணா. அதன் பிறகுதான் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இதுதொடர்பாக நடிகை சுனைனாவிடம் தொடர்பு கொள்ள முற்பட்டபோது அவர், போனை அட்டண்ட் பண்ணவில்லை. அதேசமயம் அவரது அம்மாவிடம் தொடர்பு கொண்டு இதுப்பற்றி கேட்டோம்... அவர் கூறுகையில், வன்மம் படத்தை முடித்தவுடன் நாங்கள் சுத்தமாக சென்னையில் இல்லை, பெங்களூருக்கு வந்துவிட்டோம். கிருஷ்ணாவுக்கும், எங்களுக்கும் அதன்பின்னர் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. கிருஷ்ணா குடும்ப பிரச்னையில், தேவையில்லாமல் என் மகளை தொடர்புபடுத்துவது நியாயம் அல்ல என்று கூறியுள்ளார்.