அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஸ்ரீதிவ்யா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றபோதும், சென்னையிலும் அவருக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அதனால் தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர்களை சந்தித்து பொழுதை கழிக்கிறார். அப்போது தான் ஒரு நடிகை என்பதை மறந்து விட்டு, தெருக்களில் இறங்கி பால் அடித்து விளையாடுகிறாராம் ஸ்ரீதிவ்யா.
அதோடு நில்லாமல், உயிருக்கு உயிரான தோழிகளை சில சமயங்களில் தான் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கும் வரவைத்து கேரவனுக்குள் அமர்ந்து விளையாடுகிறாராம். ஆனால் தனக்கு டேக் ரெடியாகி விட்டதை உதவி இயக்குனர்கள் தெரிவிக்கும்போது தோழிகளை கேரவனுக்குள்ளேயே இருக்க சொல்லிவிட்டு கேமரா முன்பு வந்து நடிக்கிறார்.
ஆனால், யாராவது தோழிகள் தான் நடிப்பதை பார்க்க வேண்டும் என்று வெளியில் வந்தால், அவர்களை உள்ளே செல்லுமாறு கண்டிசனை துரத்தி விடுகிறாராம். காரணம், தான் நடிப்பதை தனக்கு வேண்டப்பட்டவர்கள் பார்த்தால் ஸ்ரீதிவ்யாவுக்கு நடிப்பே வராதாம். அதன்காரணமாகவே, ஸ்ரீதிவ்யாவின் அம்மா அவர் நடித்துக்கொண்டிருக்கும் ஏரியா பக்கமே வரமாட்டாராம். அந்த அளவுக்கு அம்மாவுக்கும் கண்டிசன் போட்டு வைத்திருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.