‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஷங்கர் - ரஜினி கூட்டணியில், கடந்த 2010ம் ஆண்டு வௌிவந்த படம் எந்திரன். ரோபோவை மையமாக வைத்து வௌிவந்த இப்படம் இந்திய சினிமாவின் ஒரு மைல்கல். தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்களை இப்படத்தில் புகுத்தியிருந்தார் ஷங்கர். இப்படம் வெற்றி பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது. இந்நிலையில், 'ஐ' படத்திற்கு பிறகு ஷங்கர் ஏற்கனவே சொன்னபடி எந்திரன்௦-2 பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். இதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகளில் தனது குழுவோடு ரகசியமாக செய்து வந்தார்.
அதோடு, அவ்வப்போது ரஜினியும், எந்திரன்-2 கதை விவாதத்தில் பங்கேற்று வந்தார். மேலும், ரஜினியோடு வில்லனாக கமல், விக்ரம், பாலிவுட் நடிகர் அமீர்கான் போன்ற நடிகர்களை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வந்தன. இருதினங்களுக்கு முன்னர் கூட ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்கப்போவதாக தகவல் வந்தது.
இந்நிலையில், எந்திரன்-2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.அதாவது எந்த மாதிரி காட்சிகள் வர வேண்டும், எந்தமாதிரி கிராபிக்ஸ் காட்சிகள் இருக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்களை ஷங்கர் இறுதிசெய்துவிட்டாராம். தற்போது ரஜினி, அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு இறுதிக்குள் முடிந்துவிடும், இதை முடித்த பின்னர் எந்திரன்-2 படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படி பார்க்கையில் எந்திரன்-2 படம் 2016ம் ஆண்டு துவக்கத்தில் துவங்கும் என தெரிகிறது.
எந்திரன் படத்தை காட்டிலும் இன்னும் பிரமாண்டமாய் எந்திரன்-2 உருவாக இருக்கிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. எந்திரன் படத்தில் பணியாற்றிய வேல்ராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களும் எந்திரன்-2விலும் பணியாற்ற இருக்கின்றனர்.