ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"நான் நான்கு தலைமுறைகளை பார்த்தவன் என்னால் இன்றைய இளைஞர்களை தாண்டி படம் எடுக்க முடியும்" என்று பாரதிராஜா கூறினார். பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடித்துள்ள உறுமீன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேசியதாவது:
இன்றைய சினிமா அமானுஷ்ய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இளைஞர்கள் புதிதாக நிறைய யோசிக்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களுக்கு கை கொடுக்கிறது. இங்கு பேசிய எஸ்.ஜே.சூர்யா என்னை பெரிதாக பேசிவிட்டு கார்த்திக் சுப்புராஜை காண்டம்ப்ரரி இயக்குனர் என்று பாராட்டினார். அப்படியென்றால் என்னை அவர் காண்டம்ப்ரரி இயக்குனர் இல்லை என்கிறார் என்று அர்த்தம்.
நான் சின்னப்பா கால சினிமாவையும் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர், சிவாஜி கால சினிமாவையும் பார்த்திருக்கிறேன். இன்றைய சினிமாவையும் பார்க்கிறேன். இன்றைய இளைஞர்களை தாண்டியும் என்னால் செல்ல முடியும் அத்தனை விஷயங்கள் என்னிடம் இருகிறது. நானும் வருகிறேன். பாபி சிம்ஹா நடித்த படங்களை பார்த்து வருகிறேன். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு விருது கிடைக்க நிறைய மெனக்கெட்டேன். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.