இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சூதுகவ்வும், பீட்சா-2, தெகிடி ஆகிய படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இதில் தெகிடி படத்தில் அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதனால் வளர்ந்து வரும் ஹீரோக்களில் அவரும் முக்கியமான நடிகராகிவிடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதையடுத்து அவர் நடித்த சவாலே சமாளி, பிறை தேடிய நாட்கள், வரை படம், 144 ஆகிய படங்கள் வெளியாக தாமதமாகிக் கொண்டு வருவதால் தெகிடிக்குப் பிறகு அசோக்செல்வனை ரசிகர்கள் திரையில் பார்க்க முடியவில்லை.
இந்தநிலையில், ப்ரியாஆனந்துடன் இணைந்து அவர் நடித்து வரும் கூட்டத்தில் ஒருவன் படத்தின் விளம்பரங்கள் மூலம் மீண்டும் அசோக்செல்வன் பேசப்பட்டு வருகிறார். அதோடு, ஒரு படம் இயக்கி விட்டு அடுத்து முன்னணி ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு கிடைக்காதபட்சத்தில் அந்த இயக்குனர்கள் அசோக்செல்வனை நாடுகின்றனர்.
காரணம், சரியான படம் கிடைத்தால் இவர் பெரிய நடிகராகி விடுவார் என்பதோடு, வெயிட்டான கதைகளுக்கு அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுக்கும் திறமை இவரிடம் உள்ளது என்றும் அசோக்செல்வன் மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தெரிவிக்கிறார்கள் இயக்குனர்கள்.