தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய சினிமாவின் டாப் மோஸ்ட் கிராபிக்ஸ் டிசைனர் ஸ்ரீனிவாஸ் மோகன். சிவாஜி, ஐ, எந்திரன், நான் ஈ படங்களுக்கு கிராபிக்ஸ் பணியாற்றியவர். தப்போது பாகுபலி படத்தில் பணியாற்றி வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இனி வரும் காலங்களில் பிரமாண்ட படங்களே மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரும். அப்படிப்பட்ட பிரமாண்ட படங்களுக்கு கிராபிக்ஸ் முக்கியம். எல்லாவற்றையும் நேரடியாக படம்பிடிக்க நிறைய செலவாகும். அதையே கிராபிக்சில் செய்தால் செலவு குறையும். கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கிராபிக்ஸ் பணிகளை செய்ய தற்போது தொழில்நுட்பம் வந்து விட்டது. பாகுபலி படத்திற்கு பிறகு கிராபிக்சில் வலிமை அனைவருக்கும் தெரிய வரும். நடிகர் நடிகைகள் தவிர மற்ற அனைத்திலுமே கிராபிக்சின் பங்கு இருக்கும்.
சிறிய பட்ஜெட் படங்களில்கூட கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு கிராபிக்ஸ் பணிகள் இருக்கும். தற்போது சினிமாவில் 24 கலை பிரிவுகள் இருக்கிறது. தற்போது 25வது கலைப் பிரிவாக கிராபிக்ஸ் இணைந்துள்ளது. இனி சினிமாவில் கிராபிக்ஸ் தவிர்க்க முடியாத, பிரிக்க முடியாத அங்கமா இருக்கும். என்றார்.