சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பாகன் படத்திற்கு பிறகு ஸ்ரீகாந்த் நடித்து வந்த எதிரி எண்-3, நம்பியார், ஓம் சாந்தி ஓம் என மூன்று படங்களுமே வெளிவராமல் கிடப்பில் கிடக்கின்றன. இதில் எதிரி எண்-3 படம் பாதியிலேயே ட்ராப்பாகி விட்டது. ஆனால், ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும் மற்ற இரண்டு படங்களும் தடுமாறிக்கொண்டு கிடக்கின்றன.
காரணம், நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்துக்கு இணையான வேடத்தில் சந்தானமும் நடித்தார். விளைவு தனது வியாபார வட்டத்தை கருத்தில் கொள்ளாமல் சந்தானம் படத்தில் இருப்பதால் 5 கோடிக்குமேல் செலவு செய்து அந்த படத்தை தயாரித்தார் ஸ்ரீகாந்த்.
ஆனால், அவ்வளவு தொகையை கொடுத்து படத்தை வாங்க ஆளில்லாததால் இப்போது வரை அப்படம் கிடப்பில் கிடக்கிறது. ஓம் சாந்தி ஓம் படத்தை எடுத்துக்கொண்டால், ரிலீசுக்கு தயார் நிலையில்தான் உள்ளது. ஆனபோதும், அந்த படமும் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் படமும் ஒரே ஆங்கில படத்தின் தழுவலாம்.
இந்த நிலையில், சூர்யாவின் மாஸ் படத்திற்கு முன்பே வெளியாக வேண்டிய ஓம் சாந்தி ஓம் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. அந்த கேப்பில் மாஸ் படம் வெளியாகி விட்டது. அதன்பிறகுதான் ஓம் சாந்தி ஓம் படத்தின் கதைதான் மாஸ் என்பது தெரிய வந்தது. அதனால், இப்போது அந்த படமும் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இருப்பினும் சிலபல மாற்றங்களை செய்து சில மாதங்கள் கழித்து அப்படத்தை வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.