பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கன்னடத்தில் ஹீரோவாக நடித்து வந்த கிஷோர் பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு அவர் பல படங்களில் வில்லனாக நடித்தாலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த ஹரிதாஸ் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தற்போது அவர் காதலியை காணவில்லை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடிகார மனிதர்கள் என்ற மற்றொரு படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.
கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னை வந்து வறுமையில் வாடுபவராக நடிக்கிறார். அவரது நண்பராக கருணாகரன் நடிக்கிறார். ஷெரின் என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். உமா ராவ், பாலா சிங், தயாரிப்பாளர் பிரதீப் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
"எல்லோருமே கடிகாரத்துக்கு அடிமையாக வாழ்கிறார்கள். காலையில் 9 மணிக்கு வேலைக்கு சென்று 6 மணிக்கு திரும்பும் இயந்திர வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை சூழலுக்குள் கிராமத்தில் இயற்கையோடு வாழ்ந்தவன் வந்து சிக்கிக் கொண்டால் அவன் நிலைமை எப்படி இருக்கும் என்பதுதான் படம். கிராமமும், நகரமும் கலந்த ஒரு முகம் தேவைப்பட்டது. கிஷோரிடம் கதை சொன்னேன். உடனே ஒப்புக் கொண்டு நடிக்கிறார்" என்றார் இயக்குனர் வைகறை பாலன்.