தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாண்டியநாடு படம் மெகா ஹிட்டானது. அதன்காரணமாகவே மீண்டும் அவரது இயக்கத்தில் பாயும்புலி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஷால். அதோடு, மதுரையை மையப்படுத்தி ஏராளமான கதைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், கதையில் வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டுமென்று விஷாலுக்கு காக்கி சட்டை மாட்டி விட்டு ரவுடிகளை களையெடுக்க வைத்திருக்கிறார் சுசீந்திரன்.பெருவாரியான காட்சிகளை சென்னையிலேயே படமாக்கியபோதும், மதுரை பேக்ட்ராப் வேண்டும் என்பதற்காக பின்னர் மதுரை நகரத்தில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வந்தார் சுசீந்திரன். அப்போது படத்தில் நடிக்கும் காஜல்அகர்வால் உள்ளிட்ட அனைவருமே சரியான ஒத்துழைப்பு கொடுத்ததால் தற்போது படப்பிடிப்பை இறுதிகட்டத்துக்கு கொண்டு வந்துவிட்டனர். அந்த வகையில், இன்னும் 7 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டியுள்ளதாம். தற்போது ஒரு சின்ன பிரேக் விட்டுள்ள சுசீந்திரன். விரைவில் மதுரை சென்று இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்துகிறாராம். அப்போது க்ளைமாக்ஸ் காட்சி படமாவதால் படத்தில் நடிக்கும் மொத்த நடிகர் நடிகைகளும் மதுரையில் முகாமிடுகிறார்களாம்.