இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஷங்கரின் ஐ படத்தை தொடர்ந்து, விஜய் மில்டனின் இயக்கத்தில், ''10 எண்றதுக்குள்ள'' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். விக்ரம் ஜோடியாக சமந்தா, இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை, ஹாலிவுட் படமான தி டிரான்ஸ்பார்மர் சாயலிலான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விஜய் மில்டன் படத்திற்கு பிறகு விக்ரம், அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் சங்கர் படத்திலும், அதற்கு அடுத்து கௌதம் மேனன் படத்திலும் நடிப்பதாக இருந்தது. ஆனந்த் சங்கர் படத்தை தாணுவும், கௌதம் மேனன் படத்தை ஐயங்கரன் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது கௌதம் மேனன் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி பிரச்னை காரணமாக விக்ரம் உடனான கௌதம் மேனன் படம் டிராப்பாகிவிட்டதாக சொல்கிறார்கள்.