ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'வாலு' படத்தின் வெளியீட்டை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய ரசிகர்களை சிம்பு ஒரு நல்ல செய்தியைத் தெரிவித்து மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். 'இது நம்ம ஆளு' படம் எப்படியும் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்து விடும். இந்தப் படத்திற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ளது. இதனிடையே தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா', செல்வராகவன் இயக்கும் புதிய படம் என இரண்டு படங்களில் அடுத்தடுத்து சிம்பு கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இது குறித்து சிம்பு கூறியுள்ளதாவது, “என் ரசிகர்கள் எப்போதும் என்னுடனே இருக்கிறார்கள். அடுத்த நட்சத்திரங்களின் ரசிகர்களை நான் என்றுமே எதிர்பார்ப்பதில்லை. என் ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நெகிழ்ந்து போயுள்ளேன். அவர்களின் அன்புக்கு நன்றி.
தொடர்ச்சியாக கௌதம் மேனனின் 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் செல்வராகவன் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறேன். உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய வைப்பேன். பாண்டிராஜ், அடுத்து கௌதம் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகியோரது இயக்கத்தில் நடிப்பது சிறந்த அனுபவம். ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்கள். என்னுடைய சிறந்த நடிப்பை இந்தப் படங்களில் வெளிப்படுத்துவேன்,” என்று கூறியிருக்கிறார்.