ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
பெரும்பாலும் காமெடி காட்சிகள் என்றால் வசனங்கள், பாடிலாங்குவேஜ் மூலம்தான் நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள் காமெடியன்கள். ஆனால் அது நான் கடவுள் ராஜேந்திரன் விசயத்தில் வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது அவர் மற்றவர்களைப் போன்று காமெடி செய்த படங்களை விட அருவா கம்பு, துப்பாக்கியை தூக்கி கொண்டு நடித்த படங்களில்தான் அவரது காமெடிக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதனால் இவரே மாற நினைத்தாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. அவரை ரவுடியாக, கூலிப்படையாக, கறிக்கடைக்காரனாக என அவரது கையில் ஏதாவது ஆயுதங்களை கொடுத்துதான் நடிக்க வைக்கிறார்கள். ஆனால் அப்படி சொல்லும் டைரக்டர்களிடம், காமெடி செய்கிறோம் எதற்காக அருவா கம்புடன் திரிய வேண்டும் என்று இவர் கேள்வி கேட்டால், அப்படி எதையாவது தூக்கினால்தான் உங்க காமெடி ஒர்க்அவுட் ஆவுது என்கிறார்களாம்.
ஆக, நாம் நினைப்பதை விட மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள். எதை ரசிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்ற முடிவுக்கு இப்போது வந்து விட்ட நான் கடவுள் ராஜேந்திரன், டைரக்டர்கள், ரசிகர்கள் விரும்பும் பாதையிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்துவிட்டாராம்.
அதேசமயம், அவர் பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றத்தில் இருந்தாலும் நிஜத்தில் இளகிய மனம் கொண்டவராம். யாராவது கண்கலங்குவதை பார்த்தால் தானும் கரைந்து விடுவாராம்.