இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ்-தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தற்போது விக்ரமுடன் ''10 எண்றதுக்குள்ள'', தனுஷூடன் ''விஐபி-2'' படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் தான் பயந்த சுபாவம் என்றும், சினிமாவுக்கு வந்த பின்னர் அந்த பயம் போய்விட்டதாகவும் சமந்தா கூறியுள்ளார்.
இதுகுறித்து சமந்தா மேலும் கூறியிருப்பதாவது, சின்ன வயது முதலே நான் கூச்சம் சுபாவம் உடையவள். நான்கைந்து பேர் கூடி நின்றாலே அங்கு போக பயப்படுவேன். பள்ளியில் ஆசிரியர் நடன ஆட சொன்னபோது கேலி செய்வார்களோ என்று பயப்படுவேன். ஆனால் அந்த பயம் எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டது. சினிமாவுக்கு வந்த பின்னர் என்னுள் இருந்த பயம், கூச்சம் எல்லாம் போய் ஒருவித தைரியம் வந்துள்ளது. இப்போது நான் நன்றாக நடனம் ஆடுகிறேன். அதற்கு காரணம் ஹீரோக்கள் தான். அவர்களை பார்த்து தான் நான் நடனம் கற்று கொண்டேன் என்று கூறியுள்ளார்.