அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'இது என்ன மாயம்' படத்திற்குப் பிறகு விஜய், பிரபுதேவா தயாரித்து நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அமலா பாலை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என பிரபுதேவா சொன்னதை விஜய்யும் ஏற்றுக் கொண்டுள்ளாராம். இப்போது கணவர் விஜய் இயக்கத்தில் 'தெய்வத் திருமகள், தலைவா' படங்களுக்குப் பிறகு மீண்டும் அமலா பால் நடிக்க உள்ளார். திருமணத்திற்குப் பிறகும் அமலா பால் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
ஹிந்திப் படங்களைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவா திடீரென தமிழில் படங்களைத் தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக அவரே நாயகனாக நடிக்கும் படத்தை முதலில் தயாரிக்க உள்ளார். அதன் பின் முன்னணி நடிகர்கள், மற்ற இயக்குனர்கள் இயக்கும் படங்களையும் தயாரிக்க உள்ளார் என்கிறார்கள்.
பிரபுதேவா மீண்டும் நடனமாடி, இளம் நாயகனாக நடிப்பாரா அல்லது கொஞ்சம் மெச்சூரிட்டியான கதாபாத்திரங்களில் நடிப்பாரா என்பது பற்றி இனிமேல்தான் தெரிய வரும் என்கிறார்கள்.