ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
கடந்தவாரம் சனிக்கிழமை(May 17, 2015) சியாட்டல் தமிச் சங்கம்சார்பாக, ரெட்மொன்ட் பள்ளி வளாகத்தில்," வெங்காயம்", திரைப்பட புகழ் திரு.சங்ககிரி. ராஜ்குமார் வழங்கிய திரைப்பட தயாரிக்கும் பட்டறை நடைபெற்றது. கதை உருவாகுதல் முதல், திரைப்படம் திரையரங்குளில் வெளியிடுவதுவரை, ஒரு திரைபடத்தை உருவாக்கி மக்களிடம் எவ்வாறு சேர்ப்பிப்பது என்று கற்பிக்கப் பெற்றது.
சிறு மற்றும் குறும்படம் இயக்குவதை பொழுதுபோக்காய் கொண்டர்வர்களும், வருங்காலத்தில் இயக்குனராக விருப்பம் உடையவர்களும், திரைதுறையை தெரிந்து கொள்ளலாம் என்று வந்திருந்தவர்களும், ராஜ்குமாரின் விவரிப்பை உள்வாங்கி, கேள்விகளை எழுப்பி தெளிவுகொண்டனர். அடிப்படை கேள்விகள் முதல் தொழில்நுட்ப கேள்விகள் வரை அனைத்து கேள்விகளுக்கும் இயக்குனர் திரு.இராஜ்குமார் விரிவான பதிலளித்தார்.
தனது திரைப்படங்கள் "வெங்காயம்" மற்றும் "நெடும்பா" வில் அவர் உபயோகித்த கதைக்களம், சூழல், இடம், நடிகர்கள், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை, எடிட்டிங், பயன்படுத்திய தொழிநுட்பங்கள், தணிக்கை, திரைப்படம் வெளியீடு, விநியோகம் என்று அவருடைய அனுபவத்தையே, பயிற்சி களத்தில் உதாரணமாக எடுத்துரைத்தது, இளம் இயக்குனர்களுக்கு நம்பிக்கை பாடமாகவும் இருந்தது.
குறிப்பிட்ட நேரத்தையும் கடந்த கேள்வி- பதில் விவாதம் நண்பர் வீட்டில் இரவு விருந்தோடு தொடர்ந்தது. பங்கு கொண்டோரின்ஆர்வம், கேள்விகள், இம்மாதிரியான பட்டறைக்கு கிடைத்த வரவேற்பையே காட்டியது. மொத்தத்தில் ஒரு இயக்குனர் பணி என்பது அதில் ரசித்து லயத்து பணிபுரிவர்களுக்கே சாத்தியம் எனபதை இப்பட்டறை உணர்த்தியது.