ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2014ம் ஆண்டு வெளிவந்த படங்களில் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களில் குறிப்பிட வேண்டிய படம் 'ஜிகர்தண்டா'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்காக பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தப் படம் முடிவடையும் தருவாயில் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கும், தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் இடையே தகராறு உருவானது. ஒரு கட்டத்தில் படம் வெளிவருமா என்று கூட சந்தேகம் எழுந்தது. அதன் பின் சமரசப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு படம் வெளிவந்து வெற்றியும் பெற்றது.
தற்போது இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் விவகாரத்தில் மீண்டும் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்குத் தெரியாமலேயே தயாரிப்பாளர் கதிரேசன் விற்று விட்டார் என்று சொல்லப்படுகிறது. படத்திற்கு கதை எழுதியவர் என்ற உரிமையில் கார்த்திக்கிற்கும் ரீமேக் ரைட்ஸில் விற்ற பணம் சென்று சேர வேண்டும். அது மட்டுமல்ல அவருடைய அனுமதி இல்லாமல் ரீமேக்கை விற்கவும் முடியாது என்கிறார்கள். அதனால் கார்த்திக் இயக்குனர்கள் சங்கத்தில் தயாரிப்பாளர் கதிரேசன் மீது புகார் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இது சம்பந்தமாக பஞ்சாயத்து நடைபெறலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.