பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தலைவன் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிகிஷா பட்டேல். அப்படம் பரபரப்பாக வளர்ந்து வந்ததால் தனக்கு கோலிவுட்டில் பெரிய இடம் காத்திருக்கிறது என்றுதான் அப்போது நினைத்தார் நிகிஷா. ஆனால் அந்த படமும், அதன்பிறகு அவர் நடித்த என்னமோ ஏதோ என்ற இரண்டு படங்களுமே நிகிஷாவை ஏமாற்றி விட்டன. இந்த நிலையில்தான், நகுலுடன் நாரதன் படத்தில் கமிட்டானார். இதே படத்தில் ஸ்ருதி ராமகிருஷ்ணன் என்று இன்னொரு நாயகியும் இருந்தபோதும் நிகிஷாவுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களாம். அதனால், இந்த நாரதன் படத்தில் தனது திறமை பளிச்சிடும் என்று எதிர்பார்க்கிறார் நிகிஷா. முன்னதாக, இப்படத்தை விரைவில் வெளியிடும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த பரபரப்போடு புதிய படங்களை கைப்பற்றும் வேலைகளிலும் இறங்கியிருக்கும் நிகிஷா பட்டேல், தனக்கு தமிழ் தெரியாது என்று முன்பு தவிர்த்த சில இயக்குனர்களை சந்தித்து, இப்ப நான் தமிழில் ரொம்பவே தேறிவிட்டேன் என்று சொல்லி தனக்குத் தெரிந்த தமிழை கடித்து குதறி பேசிக்கொண்டு திரிகிறார்.