டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்கிய முதல் படம் எங்கேயும் எப்போதும். அப்படத்தில் ஜெய்-அஞ்சலியின் காம்பினேசன் பேசப்பட்டது. குறிப்பாக, ஒரு பெண்ணின் மனநிலை கொண்டவராக ஜெய் நடித்திருந்தார். அப்படமும் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து விக்ரம்பிரபு நடிப்பில் இவன்வேற மாதிரி படத்தை இயக்கிய சரவணன், தனது 3-வது படத்தில் மீண்டும் ஜெய்யுடன் இணைந்தார். அவரை அதிரடியான ஆக்சன் ஹீரோவாக வைத்து வலியவன் படத்தை இயக்கினார். அதோடு ஜெய்யின் வியாபாரத்தை கருத்தில் கொள்ளாமல் டபுள் மடங்கு செலவு செய்து அந்த படத்தை இயக்கினார். ஆனால், தியேட்டரில் ஒரு காட்சிகூட அப்படம் ஹவுஸ்புல்லாக ஓடவில்லை. ஓரிரு நாட்களிலேயே தியேட்டர்களை விட்டும் ஓடியது. விளைவு, அதையடுத்து தனது புதிய படத்திற்காக ஜெய்யை வைத்து மெகா பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்த, நான் சிகப்பு மனிதன் இயக்குனர் திரு, இப்போது அப்படத்தின் பட்ஜெட்டை பாதியாக குறைத்து விட்டாராம். அது மட்டுமின்றி, ஜெய்க்கு பெரிதாக மார்க்கெட் இல்லை என்பதால், அதே படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கும் சமுத்திரகனி மற்றும் நாயகி டாப்சிக்கு கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறாராம். ஆக, அப்படத்தில் பெயரளவுக்குத்தான் ஜெய் ஹீரோவாம்.