டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்வரை அப்படத்தின் புரமோஷனுக்கு எப்போது அழைத்தாலும் வந்தார் அப்படத்தின் நாயகியான ப்ரியா ஆனந்த். தொலைக்காட்சி புரமோஷனுக்கு வரும்போது மேக்கப்மேன், காஸ்ட்யூமர் மற்றும் அவரது உதவியாளருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். வை ராஜா வை படத்தின் தயாரிப்பு நிர்வாகியான பெண்மணியிடம் கேட்டபோது இதோ தருகிறேன்... அதோ தருகிறேன் என்று இழுத்தடித்திருக்கிறார். பெரிய பட நிறுவனம் ஏமாற்ற மாட்டார்கள்... சொன்னபடி கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் உற்சாகமாக வை ராஜா வை புரமோஷன்களில் பங்கெடுத்தார் ப்ரியா ஆனந்த். படம் ரிலீஸ் ஆகி... எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் தோல்வியடைந்ததினால்... ப்ரியா ஆனந்தின் ஸ்டாஃப்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை ஏஜிஎஸ் டப நிறுவனம் தரவில்லையாம்.
பலமுறைக் கேட்டுப்பார்த்தும் தயாரிப்பு நிர்வாகியான பெண்மணி அசைந்து கொடுக்கவில்லையாம். இதே நிறுவனத்தில் தயாரிப்பில் ஏற்கனவே, இரும்புகுதிரைகள் படத்தில் நடித்தார் ப்ரியா ஆனந்த். அந்தப் படத்தின் புரமோஷனின்போதும் இப்படித்தான் அவருடைய ஸ்டாஃப்களுக்கு சம்பளம் தராமல் பாக்கி வைத்திருக்கின்றனர். அப்போது தன் சொந்தப்பணத்தைக் கொடுத்து ஸ்டாஃப்களின் கணக்கை முடித்தாராம் ப்ரியா ஆனந்த்.
இந்தமுறை அப்படி ஏமாறக்கூடாது என்ற தீர்மானத்தோடு, தயாரிப்பு நிர்வாகி பெண்மணிக்கு போன், மெஸேஜ் என்று துரத்திக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில், உண்மையிலேயே ஏஜிஎஸ் நிறுவனம்தான் சம்பளத்தை செட்டில் பண்ணாமல் பாக்கி வைத்திருக்கிறதா... அல்லது தயாரிப்பு நிர்வாகியான அந்தப் பெண்மணி சம்பளத்தை வாங்கி ஏப்பம்விட்டுவிட்டாரா என்று விசாரிக்கும்படி தன் மானேஜருக்கு உத்தரவிட்டிருக்கிறார் ப்ரியா ஆனந்த்.