மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நாடக கலைஞர்களை பற்றி அண்மையில் காவியத் தலைவன் என்ற படம் வெளிவந்தது. வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா நடித்திருந்தார்கள். இது சுதந்திர போராட்ட கால கட்டத்தில் வாழ்ந்த நாடக கலைஞர்கள் பற்றியது.
தற்போதுள்ள நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு களரி என்ற படத்தை புதுமுகங்கள் இணைந்து உருவாக்குகிறார்கள். குறிப்பாக வீதி நாடக கலைஞர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகிறது. அஜய், உமாஸ்ரீ என்ற புதுமுகங்கள் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர வீதி நாடக கலைஞர்களான வர்ஷன், பவன்குமார், மையவன், திருநாவுக்கரசு, ஷீலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
நடராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை பள்ளி மாணவர் சரவணன் வாசுதேவன் இசை அமைக்கிறார். உதயராஜன் இயக்குகிறார். சென்னையை சுற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது.