டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'நான் ஈ' படத்தின் வெற்றி இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி கடந்த இரண்டு வருடங்களாக பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது. முதலில் மே மாதம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படத்தை ஜுலை மாதம்தான் வெளியிட உள்ளனர். படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள், எஃபெக்ட்ஸ் காட்சிகள் ஆகியவற்றின் பணிகள் இன்னும் முடியாததே கொஞ்சம் தாமதமான வெளியீட்டிற்கான காரணம் என ராஜமௌலி கடந்த வாரம் அறிவித்தார்.
அதோடு அவர் அறிவித்தபடி படத்தின் போஸ்டர்களை கடந்த சில நாட்களாக ஒன்றன்பின்ஒன்றாக வெளியிட்டு வருகிறார்கள். மே 1ம் தேதி இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. சற்று முன்னர் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். நடிகர் பிரபாஸ் ஒரு சிவலிங்கத்தைத் தூக்கிக் கொண்டு நடப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராஜமௌலி கூடவே,
“கங்கையை ஏந்திடும் சிவனை
தோளினில் ஏந்திடும் இவனை
யார் எனப் பார்த்திடும் ஞாலம்
ஒரு கணம் நின்றிடும் காலம்”
என்ற பாடலையும் சேர்த்து தமிழில் டிவீட் செய்துள்ளார்.