ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயன், அரைடஜன் படங்களில் நடித்தநிலையில் சொந்தப்படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.
காக்கி சாட்டை படத்தை அடுத்து தற்போது ரஜினி முருகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் நடிக்க இருந்தார். தற்போது அந்த முடிவை கைவிட்டு சொந்தப்படங்களில் நடிப்பது என முடிவுக்கு வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். தனது நணபரும் மேனேஜருமான ஆர்.டி.ராஜாவுடன் இணைந்து புதிய படக்கம்பெனி துவங்கி உள்ளார். சிவகார்த்திகேயன் பிக்சர்ஸ் என்ற பேனரில் தொடங்கப்பட்டுள்ளது புதிய படநிறுவனம்.
இப்படத்தை அட்லியிடம் அசோசியேட்டாக வேலை பார்த்த பாக்யராஜ் பாரதி என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை சமந்தா. இப்படத்துக்கு பாதாம் பிஸ்தா என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் அடிபடுகிறது.