'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுவாமி ரா ரா மற்றும் தோசெய் போன்ற வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான சுதீர் வர்மா தற்போது ஒரு டிரெண்ட் செட்டர் என்று அழைக்கப்படுகிறார். அதாவது கிரைம் கதையில் காதலை அழகாக சொல்லி வெற்றி படத்தை எப்படி இயக்க முடியும் என்பதற்கு உதாரணமாக சுதீர் வர்மா திகழ்வதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சாதிக்க துடிக்கும் புதிய இளம் இயக்குனர்களில் பலர் இந்த பார்முலாவை பயன்படுத்த தயாராகி வருகின்றனர். இந்த இரண்டு படம் தந்த நம்பிக்கையும், நல்ல பெயரும் இயக்குனர் சுதீர் வர்மாவை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதாவது அவர் தனது மூன்றாவது படத்தில் மிகப்பெரிய ஹீரோவுடன் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜாவை சந்தித்து கதை சொல்ல இருப்பதாக கூறப்படுகின்றது. தோசெய் படத்தை பார்த்த பிரபல ஹீரோவான நாகர்ஜுனும் இயக்குனர் சுதீர் வர்மாவை பாராட்டி விட்டு, இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று கூறியுள்ளார். அதாவது சுதீர் வர்மாவிடம், நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை போனில் தொடர்பு கொள்ளலாம். என்னிடம் கதையை சொல்லலாம், நாகர்ஜுன் கூறியதாக தெரிகிறது. இதன் மூலம் சுதீர் வர்மா பிரபல ஹீரோவுடன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.