அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
அமல் நீரத் மலையாள சினிமாவில் அருமையான ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, திறமையான இயக்குனரும் கூட. அதனால் தான் மலையாளத்தில் நடிக்கலாமா என்று யோசித்த பிரகாஷ்ராஜே கூட இவர் இயக்கிய 'அன்வர்' படத்தில் நடித்துக்கொடுத்தார். சில மாதங்களுக்கு முன் இவர் இயக்கத்தில் வெளியான 'அயூப்பிண்டே புஸ்தகம்' பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. மம்முட்டியை வைத்து 'பிக் பி' படம் மூலம் இயக்குனராக மாறிய அமல் நீரத், இப்போது துல்கர் சல்மானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார். அப்படியானால் மம்முட்டியையும், பிருத்விராஜையும் வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் 'குஞ்சாலி மரைக்காயர்' வரலாற்றை அமல் நீரத் படமாக்கப்போவதாக வந்த செய்தி உண்மையில்லையா..? உண்மையோ, பொய்யோ.. இப்போதைக்கு அதை தள்ளிவைத்துவிட்டு துல்கர் படத்தை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே 'அஞ்சு சுந்தரிகள்' என்கிற ஆந்தாலாஜி படத்தின் (குறும்படங்களை ஒருங்கிணைத்த படம்) ஐந்து எபிசோடுகளில் 'குள்ளண்டே பார்யா' என்கிற குறும்படத்தில் துல்கரை வைத்து இயக்கியிருந்தார் அமல் நீரத். இப்போது முழு நீளப்படமாகவே இயக்கவுள்ளார். இந்தப்படத்தில் துல்கர் சல்மான் டான்சராக நடிக்க இருக்கிறார். இதுவரை துல்கர் நடித்த படங்கள் எதிலும் அவர் அவ்வளவாக டான்ஸ் ஆடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.