தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவியாளர்களாக பணியாற்றியவர்களில் இயக்குநர் வஸந்த் முக்கியமானவர். கேளடி கண்மணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வஸந்த், ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், ரிதம், சத்தம் போடாதே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இயக்கிய படங்கள் குறைவு தான் என்றாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் வஸந்த்.
இதுநாள் வரை இயக்குநராக இருந்து வந்த வஸந்த், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், கெளதம் கார்த்திக் நடித்துள்ள, வை ராஜா வை படத்தில் கெளதமின் அப்பாவாக நடித்துள்ளார். வஸந்த் இதற்கு முன் சில படங்களில் சின்ன சின்ன ரோலில் தலைகாட்டியுள்ளார், ஆனால் வை ராஜா வை படத்தில் தான் முதன்முறையாக ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நம்மிடம் வஸந்த் பேசுகையில், எனக்கு பிறரை நடிக்க வைத்து தான் பழக்கம். ஆனால் என்னையும் நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். இந்த ரோலில் நான் நடிக்க மாட்டேன் என்றேன். ஆனால் ஐஸ்வர்யா தான், ஒற்றை காலில் நின்று இப்படத்தில் நடிக்க வைத்தார். ஆரம்பத்தில் நடித்தபோது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் எனக்கு தைரியம் தந்தவர் ஐஸ்வர்யா. இந்தப்படத்தில் நடித்த பிறகு என்னாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன் என்று கூறினார்.