போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
8 வருடங்களுக்கு பிறகு நடிகை ஜோதிகா ரீ-என்ட்ரியாகி இருக்கிறார். புகழின் உச்சியில் இருக்கும்போதே சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமா விட்டு விலகி குடும்பத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர். இப்போது குடும்ப கடமைகளை ஓரளவிற்கு நிறைவேற்றி விட்டு மீண்டும் தனது கனவு தேசமான சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
எத்தனையோ நடிகைகள் திருமணத்திற்கு பிறகு ரீ-என்ட்ரி ஆகியிருந்தாலும் ஜோதிகாவின் ரீ என்ட்ரி முக்கியமாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் திருமணமான நடிகைகளின் ரீ-என்ட்ரி என்பது அம்மா அண்ணி, வில்லி வேடமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் ஜோதிகாவின் ரீ-என்ட்ரி அதையெல்லாம் தாண்டி இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும், அழகும் திறமையும் குறையாமல் தன்னை நம்பி ஹீரோயின் கதையில் தைரியமாக ரீ-என்ட்ரி ஆகிறார்.
ஜோதிகாவின் ரீ-என்ட்ரி இரண்டு விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று நடிகர்கள் பேரன் பேத்தி எடுத்த பிறகும் பேத்தி வயதுள்ள நடிகைகளுடன் நடிக்கிறார்கள். ஆனால் திருமணமான நடிகைகள் அதற்கு பின்பு ஹீரோயினாக நடிக்கவே முடியாது என்பதுதான் இன்றை நிலை. அதை ஜோதிகாவால் மட்டுமே உடைத்து எறிய முடிய முடியும் என்ற நம்பிக்கையை 36 வயதினிலே தருகிறது. ஹீரோவை காதலிப்பது மரத்தை சுற்றி டூயட் பாடுவது மட்டும் ஹீரோயின் வேலை அல்ல, ஒரு கதையின் நாயகியாக நடிப்பதும் ஹீரோயின் வேலைதான். ஜோதிகா அப்படி ஒரு பாதையை இனி தேர்ந்தெடுக்கலாம். இந்தியில் வெளிவரும் ஹீரோயின் கதைகளான இங்கிலீஷ் விங்கிலீஷ், குயின், மேரிகோம் மாதிரியான படங்களை ஜோதிகாவால் தமிழில் தர முடியலாம். அப்படி நடந்தால் அது மகத்தான சாதனையாக இருக்கும்.
அடுத்து ஜோதிகா தரப்போகும் மாற்றம் ஆணாதிக்கம் நிறைந்த தமிழ் சினிமாவில் இனி ஹீரோயின் கதைகள் நிறைய வரலாம். அரங்கேற்றம், அவள் அப்படிததான், அவள் ஒரு தொடர்கதை, மனதில் உறுதி வேண்டும், புதுமை பெண், கல்கி போன்ற ஹீரோயின் படங்கள் இப்போது இல்லை. அந்த டிரண்டை ஜோதிகா மீண்டும் கொண்டு வரலாம். ஹீரோயின்களை அழகு பதுமைகளாவும், ஹீரோவை சுற்றி வரும் பெண்களாகவும் காட்டி வரும் நிலையில் ஜோதிகாவின் வருகை ஹீரோயின்களின் தலையெழுத்தை மாற்றி எழுதலாம்.
இந்த இரண்டில் எது நடந்தாலும் அந்த மாற்றத்திற்கான பெருமை ஜோதிகாவையும், அவரை அனுமதித்த சூர்யாவையுமே சேரும். அதற்கு ரசிகர்கள் செய்ய வேண்டியது ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தை மகத்தான வெற்றி பெற வைப்பது. அது சாத்தியமானால் இந்த மாற்றங்களும் சாத்தியமே. குடும்ப பெண்ணாக கோடி பெண்களால் வாழ முடியும். ஆனால் ஜோதிகாவாக ஜோதிவால் மட்டுமே வாழ முடியும்.