பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இதென்ன வம்பா போச்சு.. மம்முட்டி அவர் பையனுக்கு பார்த்து பார்த்து தானே பெயர் வைத்திருப்பார்.. அதெப்படி ஏதேச்சையாக வைக்க முடியும் என்று கிராஸ் கேள்வி கேட்கும் ஆளா நீங்கள்..? இப்போது மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மணிரத்னம் இயக்கியுள்ள 'ஒ காதல் கண்மணி படத்தில் நடித்திருக்கிறார் இல்லையா..? படத்தில் அவரது பெயர் ஆதித்யா வரதரராஜன். சுருக்கமாக ஆதி..! அதேபோல மம்முட்டி நடித்து கிட்டத்தட்ட அதே தினத்தில் தான் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் வெளியானது.
இந்தப்படத்தில் மனைவியை இழந்த, ஒரு பையனுக்கு தகப்பனாக நடித்திருகிறார் மம்முட்டி. படத்தில் அந்த சிறுவன் பெயரும் ஆதி தான். ஆதியாக நடித்த சிறுவனின் பெயர் சனூப் சந்தோஷ். இவன் ரேணிகுண்டா' புகழ் சனுஷாவின் தம்பி.. மணிரத்னம் படத்தில் துல்கர் ஒப்பந்தமான பின் அதில் அவரது கதாபாத்திரத்தின் ஆதி என்கிற பெயரை அடிக்கடி கேட்டதால், படத்தில் தன்னுடைய மகனாக நடித்தவருக்கும் அதையே வைக்கச்சொல்லிவிட்டாராம் மம்முட்டி. எப்படி ஒரு சென்டிமென்ட் பார்த்தீர்களா..?