ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ராகுல் ப்ரீத் சிங் யார் என்று தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடம் கேட்டால் கண்டிப்பாகத் தெரியாது என்றுதான் சொல்வார்கள். தமிழில் அவர் இதுவரை மூன்று படங்களில்தான் நடித்திருக்கிறார். அதில் அவர் அறிமுகமான முதல் படம் 'தடையறத் தாக்க' ஓரளவிற்கு ஓடியது. அடுத்து அவர் நாயகியாக நடித்த 'புத்தகம், என்னமோ ஏதோ' இரண்டு மோசமான தோல்விப் படங்கள். அத்துடன் அவரை ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தி தமிழை விட்டு அனுப்பிவிட்டார்கள். தெலுங்கில் 'வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்' என்ற படத்தில் அறிமுகமானவர், கடந்த ஆண்டு நடித்த 'ரஃப், லௌக்கியம், கரன்ட் டீகா' படங்களின் மூலம் தெலுங்குப் பட உலகினரை தன் பக்கம் திருப்பினார். அதைத் தொடர்ந்து தற்போது நான்கு தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். கிளாமராக நடிக்கவும் தயக்கம் காட்டாததால் இயக்குனர்களும், ஹீரோக்களும் தங்களது படங்களில் நடிக்க அழைப்பு விடுத்து வருகிறார்கள். சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் போட்டி போடும் அளவிற்கு இப்போது ராகுல் உயர்ந்து விட்டார். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் சமந்தாவுக்குப் பொருத்தமான கதாபாத்திரம் எது என்று ராகுலிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு “சமந்தா ரிப்பன் வெட்டுவதற்குப் பொருத்தமானவர்'' என்று பதிலளித்து சமந்தாவைப் பற்றிக் கிண்டலடித்திருக்கிறார் ராகுல். சமந்தா பல கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்வதால்தான் ராகுல் இப்படி கிண்டலடித்திருக்கிறார். புதிதாக வருபவர்களும், மற்ற ஹீரோயின்களும் தெலுங்கில் சமந்தாவைத்தான் அவர்களது போட்டியாளர்களாக கருதுகிறார்கள். அந்த அளவிற்கு சமந்தாவின் புகழ், தெலுங்கில் உச்சத்தில் உள்ளது.